’22 மாவட்டங்களில்’ அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு!

 

’22 மாவட்டங்களில்’ அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், திருச்சி, மதுரை, சேலம், நாமக்கல், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கரூர், திண்டுக்கல், திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர் மற்றும் கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.

’22 மாவட்டங்களில்’ அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு!

முன்னதாக லட்சத்தீவு பகுதியில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தென் கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதிகபட்சமாக, பாபநாசத்தில் 18 செ.மீ, மணிமுத்தாறில் 16 செ.மீ மழை பதிவாகி இருப்பதாகவும் வரும் 19ம் தேதி முதல் மழை குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.