12 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம்

 

12 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் தென் மேற்கு பருவ மழை மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. நேற்று ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததன் படி, ஆங்காங்கே லேசான சாரல் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தின் 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

12 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம்

தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் நாகை, மதுரை, திண்டுக்கல், தேனி, கரூர், திருச்சி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்யலாம் என்று தெரிவித்துள்ளது. மேலும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவித்துள்ளது.