சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

 

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. நல்ல மழையால் நீர் நிலைகள் நிரம்பியுள்ள நிலையில், பவானி சாகர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்த நிலையில் கோவை மற்றும் நீலகிரியில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பூரில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் 4 நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அதிகபட்சமாக நீலகிரி தேவாலாவில் 15 செ.மீ, அவலாஞ்சியில் 10 செ.மீ, பந்தலூரில் 8 செ.மீ மழை பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.