தமிழகத்தின் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

 

தமிழகத்தின் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

கடந்த சில நாட்களுக்கு முன்னர், தென் கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அதனை ஒட்டியுள்ள லட்சத் தீவு பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, புயலாக வலுப்பெற்றுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. நிசர்கா என்று பெயரிடப்பட்ட இந்த புயலானது, தீவிர புயலாக மாறி மும்பையில் வடகிழக்கு திசையில் 13 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து மகாராஷ்டிராவின் ஹரிஹரேஸ்வர்-டாமன் இடையே கரையை கடந்தது. இந்த புயலால் மேற்கு வங்கத்தில் பல உயிர் சேதங்கள் மற்றும் பொருட் சேதங்கள் ஏற்பட்டது. இந்த புயலின் காரணமாக தமிழகத்தில் மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டதன் பெரும்பாலான இடங்களில் மழை பெய்தது. இருப்பினும் தமிழக மக்களை வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது.

தமிழகத்தின் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

இந்த நிலையில் தென்மேற்கு பருவ மழை வெப்பச் சலனத்தால் தஞ்சாவூர்,திருவாரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் வட தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதா சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும், நீலகிரி,தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.