தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ; சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

 

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ; சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் தென் மேற்கு பருவ மழை மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. நேற்று ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததன் படி, ஆங்காங்கே லேசான சாரல் மழை பெய்தது. இந்த நிலையில் தமிழகத்தின் 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ; சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக வேலூர், சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும், ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், அதிகபட்சமாக காவேரிப்பாக்கம், ஏற்காட்டில் தலா 10 செ.மீ மழையும், ஊத்தங்கரை, போரூரில் தலா 3 செ.மீ மழை பெய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.