இந்த 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு!

 

இந்த 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தின் 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு!

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டலச் சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும். தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் வட கடலோர மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்’ என குறிப்பிட்டுள்ளது.

இந்த 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு!

மேலும், சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக நேற்று சென்னை டிஜிபி அலுவலகத்தில் 11 செ.மீ மழையும், ராமநாதபுரம் மண்டபம் மற்றும் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 6 செ.மீ மழையும் பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.