வெளுத்து வாங்கும் மழை… 12 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு!

 

வெளுத்து வாங்கும் மழை… 12 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை உட்பட 12 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பச்சலனம் காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்தது. இன்று காலை அறிக்கை வெளியிட்ட சென்னை வானிலை ஆய்வு மையம், அடுத்த 4 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் நீலகிரி, தேனி, ஈரோடு, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்திருந்தது. மேலும், சென்னையில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்திருந்தது.

வெளுத்து வாங்கும் மழை… 12 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு!

அதன் படி சென்னையில் மீனம்பாக்கம், பல்லாவரம், குரோம்பேட்டை, பெருங்களத்தூர், வண்டலூர், போரூர், பூந்தமல்லி, செம்பரம்பாக்கம், காட்டுப்பாக்கம், திருவேற்காடு, வளசரவாக்கம், மதுரவாயல் உள்ளிட்ட இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. அதே போல, காஞ்சிபுரத்தில் சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபாத் பகுதிகளிலும் திருவண்ணாமலையில் ஆரணி, சேவூர், குன்னத்தூர், வலையாம்பட்டு பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது.

வெளுத்து வாங்கும் மழை… 12 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு!

இந்த நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ராணிப்பேட்டை, வேலூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம், திண்டுக்கல், ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களிலும் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.