அலர்ட்: டெல்டா மாவட்டங்களில் இரவு முழுவதும் கனமழைக்கு வாய்ப்பு!

 

அலர்ட்: டெல்டா மாவட்டங்களில் இரவு முழுவதும் கனமழைக்கு வாய்ப்பு!

டெல்டா மாவட்டங்களில் இரவு முழுவதும் பரவலாக மழை தொடர வாய்ப்புள்ளதாக் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அலர்ட்: டெல்டா மாவட்டங்களில் இரவு முழுவதும் கனமழைக்கு வாய்ப்பு!

தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் இரவு முழுவதும் கனமழையும், சிவகங்கை, விருதுநகர், மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில் மிக கனமழையும் பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் மேற்கண்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.