மதுரையில் திடீர் கனமழை! அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை வாய்ப்பு…

 

மதுரையில் திடீர் கனமழை! அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை  வாய்ப்பு…

தமிழகத்தில் மார்ச் மாத தொடக்கத்தில்இருந்தே வெயில் மண்டையை பிளக்கிறது. இதனால் வயதானவர்கள் குடைகளை கையில் எடுத்து செல்லுங்கள் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். அதேசமயம் இளநீர், தர்பூசணி போன்ற கோடை வெயிலில் அதிகம் விரும்பப்படும் பொருட்களின் விற்பனையும் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. இந்த சூழலில் காற்றின் வேகம் மாறுபாட்டின் காரணமாக நெல்லை ,தென்காசி ,ராமநாதபுரம், தூத்துக்குடி , கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் லேசான மழை பெய்யக்கூடும் .ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மதுரையில் திடீர் கனமழை! அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை  வாய்ப்பு…

கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், மதுரை காளவாசல், பெரியார் உள்ளிட்ட பகுதிகளில் திடீரென கனமழை பெய்து வருகிறது. இதுமட்டுமின்றி, மதுரை, திண்டுக்கல், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.