தமிழகத்தில் 3 நாட்களுக்கு 13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு!

 

தமிழகத்தில் 3 நாட்களுக்கு 13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 3 நாட்களுக்கு 13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு!

28 ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ள நிலையில் 13 மாவட்டங்களில் கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி ,தூத்துக்குடி, நெல்லை ,தென்காசி, மதுரை, தேனி, திண்டுக்கல்லில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தஞ்சை, திருவாரூர், நாகை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளது.

தமிழகத்தில் 3 நாட்களுக்கு 13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் லேசான மழை பெய்யலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.திருத்தணி, நாற்றாம் பள்ளி யில் தலா 5செமீ, ஸ்ரீபெரும்புதூர் பெனுகொண்டா புரத்தில் தலா 4செமீ மழையும் பதிவாகியுள்ளது.