கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம் தகவல்

 

கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி, கோயமுத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம் தகவல்புதுச்சேரி, காரைக்காலில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யும். சென்னையை பொறுத்த வரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரியாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்ஷியஸ் ஆகவும் பதிவாகும்.

கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம் தகவல்வடக்கு ஆந்திர கடலோரப் பகுதியில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்துக்கு காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டும். அரபிக் கடல் பகுதியில் தெற்கு குஜராத், மகாராஷ்டிரா, கேரளா, லட்சத் தீவு, கர்நாடக கடல் பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் அந்த பகுதியிலும் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்” என்று கூறப்பட்டுள்ளது.