அடுத்த 2 மணி நேரத்திற்கு 4 மாவட்டங்களில் மழை!

 

அடுத்த 2 மணி நேரத்திற்கு 4 மாவட்டங்களில் மழை!

தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

அடுத்த 2 மணி நேரத்திற்கு 4 மாவட்டங்களில் மழை!

வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக ஈரோடு, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் ,திருவண்ணாமலை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை அல்லது மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதன்படி பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

அடுத்த 2 மணி நேரத்திற்கு 4 மாவட்டங்களில் மழை!

அதேசமயம் தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் லேசான முதல் மிதமான மழை இன்று பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.