அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!

 

அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!

தென் மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்நிலையில் கிழக்கு திசை காற்றலைகள் காரணமாக தென் மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், வட தமிழகத்தில் காலை நேரத்தில்பனிப்பொழிவுடன் கூடிய வானிலை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!

ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் சென்னை புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 3ஆம் தேதி வரை மன்னார் வளைகுடா, குமரிக்கடலில் வட கிழக்கிலிருந்து மணிக்கு 40 – 50 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று கூறியுள்ள வானிலை ஆய்வு மையம், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என்றும்எச்சரிக்கை விடுத்துள்ளது.