தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 24 மணிநேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு!

 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 24 மணிநேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு!

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் மேலடுக்கு சுழற்சியால் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 24 மணிநேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 24 மணிநேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு!

நிவர் மற்றும் புரெவி புயல் காரணமாக கடந்த சில வாரங்களாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தொடர்ந்து கனமழை பெய்து வந்தது. இந்த மழையால் கடலூர், புதுக்கோட்டை, சென்னை , மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. கடந்த சில நாட்களாக தான் தமிழகத்தில் பல பகுதிகளில் மழை குறைந்து வெயில் அடிக்க துவங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.