இந்த மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு…வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

 

இந்த மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு…வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழ்நாட்டில் நீலகிரி, கோயம்புத்தூர் ,தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், திருநெல்வேலி, தூத்துக்குடி, ஈரோடு ,சேலம், மதுரை,விருதுநகர் ,தர்மபுரி ,நாமக்கல், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், எஞ்சிய மாவட்டங்களில் பெரும்பாலும் லேசான மழையும், வறண்ட வானிலையும் நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு…வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

கோயமுத்தூர், நீலகிரி மாவட்டங்களில் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் மண்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது. நாளை நீலகிரி, கோயம்புத்தூர் ,தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் ,மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய திண்டுக்கல் ,தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், திருநெல்வேலி, தூத்துக்குடி, ஈரோடு ,சேலம், மதுரை, விருதுநகர், தர்மபுரி, நாமக்கல் ,கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

இந்த மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு…வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

நாளை மறுநாள் முதல் வருகின்ற 28 ஆம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் ,சேலம் ,தர்மபுரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், எஞ்சிய மாவட்டங்களில் பெரும்பாலும் லேசான மழையும் வறண்ட வானிலையே நிலவும்.

இந்த மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு…வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்ஷியஸ் ஆக இருக்கும். இன்று முதல் 28ம் தேதி வரை தமிழக கடலோரம், ஆந்திர கடலோரம், மன்னார் வளைகுடா பகுதி, தெற்கு வங்க கடல் ,மத்திய வங்கக் கடல், கர்நாடகா, கேரளா, தென்மேற்கு அரபிக்கடல் ,மத்திய அரபிக்கடல் ,வடக்கு அரபிக்கடல் ஆகிய பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இந்த தேதிகளில் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.