இந்த 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு!

 

இந்த 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு!

5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் மிக கன மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு!

வெப்ப சலனம் காரணமாக இன்று செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ,திண்டுக்கல் ,நீலகிரி ,ஈரோடு, தேனி மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். நாளை செங்கல்பட்டு விழுப்புரம் ,கள்ளக்குறிச்சி, கடலூர் ,திண்டுக்கல், நீலகிரி, தேனி, திருவண்ணாமலை, சேலம் மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

வளிமண்டலத்தில் ஈரப்பதத்துடன் கூடிய மேற்கு திசை காற்று வலுவடைவதுடன் காரணமாக வருகின்ற 28ம் தேதி நீலகிரி ,தேனி ,திண்டுக்கல், திருப்பூர் ,கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

இந்த 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு!

29ம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர் ,திருப்பூர் ,தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் அதீகன மழையும், தேனி ,விருதுநகர், தூத்துக்குடி, சேலம், ஈரோடு, தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். 30ம் தேதி நீலகிரி, கோயமுத்தூர், திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமுதல் அதிகன மழையும், திண்டுக்கல் ,தேனி ,தென்காசி, விருதுநகர் ,மதுரை ,ஈரோடு, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் . நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும்.

இன்று முதல் வருகின்ற 30ஆம் தேதி வரை மன்னார் வளைகுடா ,குமரிக்கடல், கேரள கடலோர பகுதி, லட்சத் தீவு பகுதி, தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதி ஆகிய இடங்களில் காற்றில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது .