தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு!

 

தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு!

நவம்பர் 11ம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு!

அடுத்த 48 மணி நேரத்தில் தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவையில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. ஏனைய உள் மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு!

நவம்பர் மாத பிற்பகுதியில் தமிழகத்தின் சில மாவட்டங்களில் கனமழை முதல் மிக கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நேற்றைய நிலவரப்படி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர்,மதுரை,சிவகங்கை, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்தது