8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு !

 

8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு !

8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் நீலகிரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ,விழுப்புரம், தேனி ,திருப்பத்தூர், வேலூர் ,ராணிப்பேட்டை ஆகிய எட்டு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் , தென் கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் அறிவித்துள்ளது.

8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு !

வருகின்ற 21ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் உள் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் வருகின்ற 22, 23ம் தேதிகளில் வட தமிழக மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் பொது இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், தென் தமிழக மாவட்டங்கள் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு !

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் . நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு வட தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்றும் அறிவித்துள்ளது.