சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

 

சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர் கடலூர், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்காலில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று கூறியுள்ளது. அடுத்து வரும் இரண்டு நாட்களுக்கு கடலோர தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளாதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் வளிமண்டல மற்றும் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில வாரங்களாகவே மாஸ்க்கை பெய்து வருகிறது. அத்துடன் சென்னையில் நேற்றிரவு முதலே கனமழை பெய்தது. காலை வரை விட்டுவிட்டு பெய்து வந்த மழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கி நின்றது. குறிப்பாக கடந்த 24 மணிநேரத்தில் அண்ணா பல்கலைக்கழகம், சென்னை நுங்கம்பாக்கம், எண்ணூர் ,ஆலந்தூர், சென்னை விமான நிலையம்ஆகிய இடங்களில் அதிகபட்ச மழையளவு பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.