“அடுத்த 48 மணி நேரத்தில் கன மழை” : தமிழகத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

 

“அடுத்த 48 மணி நேரத்தில் கன மழை” : தமிழகத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டையில் கன மழை.
சேலம், தர்மபுரி மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

“அடுத்த 48 மணி நேரத்தில் கன மழை” : தமிழகத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், கரூர், நாமக்கல், பெரம்பலூர், திருச்சியில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது . கடலூர், அரியலூர் மற்றும் புதுவை பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது மிதமான மழை பெய்யும் என்றும் அறிவித்துள்ளது.

“அடுத்த 48 மணி நேரத்தில் கன மழை” : தமிழகத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒருசில இடங்களில் மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கக்கடல் பகுதியில் இன்று உருவாகும் என எதிர்பார்க்கப்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் விளக்கமளித்துள்ளது.