6 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்குமாம் : உஷார் மக்களே!

 

6 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்குமாம் : உஷார் மக்களே!

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

6 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்குமாம் : உஷார் மக்களே!

தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர், புதுக்கோட்டை ,ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னை நகர் ,புற நகரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. அத்துடன் கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி ,காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

6 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்குமாம் : உஷார் மக்களே!

அதிகபட்சமாக கடலூர் புவனகிரியில் 11, பரமக்குடி, பரங்கிப்பேட்டையில் தலா 7 செமீ மழை பதிவானது. இளையான்குடி, குடவாலில் தலா 6, அய்யம்பேட்டை, மயிலாடுதுறையில் தலா 6 செமீ மழை பதிவாகியுள்ளது.தமிழகம், புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 9 சதவீதம் அதிகமாக பெய்துள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.