அடுத்த 24 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

 

அடுத்த 24 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி , மேலடுக்கு சுழற்சியால் சேலம், தர்மபுரி, வேலூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை ,திருப்பத்தூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கூறியுள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

மத்திய மேற்கு, வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனிடையே சென்னையில் வளசரவாக்கம், போரூர், ராமாபுரம், மடிப்பாக்கம், பம்மல், குன்றத்தூர், கே.கே.நகர் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்ய தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.