5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!
Oct 31, 2020, 12:56 IST1604129176000
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அத்துடன் கன்னியாகுமரி, தூத்துக்குடியில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒருசில இடங்களில் மழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆரம்பமான நிலையில் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் கடந்த வெள்ளிக்கிழமை பெய்த மழையால் சென்னை நகரமே தத்தளித்தது குறிப்பிடத்தக்கது.