“சென்னையில் மழை தொடரும்” : 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

 

“சென்னையில் மழை தொடரும்” :  5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திருவாரூர், நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

“சென்னையில் மழை தொடரும்” :  5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழக பகுதியில் காற்றின் திசைவேகம் மாறுபாடு காரணமாக மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு சில பகுதிகளில் மழை தொடர வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

“சென்னையில் மழை தொடரும்” :  5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

சென்னையில் காலை முதலே மழை பெய்ய தொடங்கியது. விட்டு விட்டு மழை பெய்து வந்த நிலையில் சென்னையில் கிண்டி, ஈக்காட்டுதாங்கல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தற்போது மழை பெய்கிறது.