தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

 

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், பெரம்பலூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அந்தமான், மத்திய கிழக்கு வங்கக்கடல், ஆந்திரா கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது .