தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

 

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தென்காசி, விருதுநகர், தூத்துக்குடியில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை ,தஞ்சை ,நாகையில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தஞ்சை மாவட்டத்தில் பட்டுக்கோட்டையிலும், புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்திலும் தலா 5 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வரும் 28ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.