இந்த மாவட்டங்களில் 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை!

 

இந்த மாவட்டங்களில் 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த மாவட்டங்களில் 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை!

இந்நிலையில் 14 ஆம் தேதி நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல்லில் இடி, மின்னல் காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 15 ஆம் தேதி நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், சேலம், தருமபுரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. 16ஆம் தேதி நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் கனமழைக்கு பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குழித்துறை, உசிலம்பட்டியில் தலா 4, ஜெயங்கொண்டம், திருபுவனத்தில் தலா 2செமீ மழை பதிவானது.

இந்த மாவட்டங்களில் 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை!
Torrential rain causing flood.

மதுரையில் கோரிப்பாளையம், புதூர் ,மாட்டுத்தாவணி ,சிம்மக்கல், திருப்பாலை அய்யர்பங்களா பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது