‘இன்று முதல் 3 நாட்களுக்கு’ இந்த மாவட்டங்களில் கனமழை!

 

‘இன்று முதல் 3 நாட்களுக்கு’ இந்த மாவட்டங்களில்  கனமழை!

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

‘இன்று முதல் 3 நாட்களுக்கு’ இந்த மாவட்டங்களில்  கனமழை!

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழ்நாட்டில் நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். தென்காசி மாவட்டம்,தர்மபுரி,கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். நாளை ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், எஞ்சிய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.

‘இன்று முதல் 3 நாட்களுக்கு’ இந்த மாவட்டங்களில்  கனமழை!

வருகின்ற 21 முதல் 23ஆம் தேதி வரை நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், லேசானது முதல் மிதமான மழையும், கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும்.

‘இன்று முதல் 3 நாட்களுக்கு’ இந்த மாவட்டங்களில்  கனமழை!

வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் வரும் 23ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இன்று முதல் வருகிற 23-ஆம் தேதி வரை தெற்கு வங்ககடல் ,மத்திய வங்கக் கடல் ,தமிழக கடலோரம், மன்னார் வளைகுடாப் பகுதி, கர்நாடகா, கேரளா ,லட்சத்தீவு ,தென்கிழக்கு அரபிக்கடல், வடக்கு தென்மேற்கு அரபிக்கடல் ,மத்திய அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.