‘மூதாட்டியிடம் செயின் பறிப்பு’ : கோவிலில் கைவரிசையை காட்டிய கொள்ளையர்கள்!

 

‘மூதாட்டியிடம் செயின் பறிப்பு’ : கோவிலில் கைவரிசையை காட்டிய கொள்ளையர்கள்!

பல்லாவரம் அருகே மூதாட்டியிடம் கோவிலில் செயின் பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் பகுதியில் வசித்து வரும் தம்பதி கதிர்வேல் – ஜெயலட்சுமி (56). கதிர்வேல் ரயில்வே துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவராம். இந்த நிலையில், நேற்று மாலை ஜெயலட்சுமி வீட்டின் அருகே இருக்கும் சிவன் கோவிலுக்கு சென்றிருக்கிறார். தரிசனம் முடித்து விட்டு வெளியே வந்த அவர், தான் அணிந்திருந்த 3 சவரன் தங்க சங்கிலியை காணவில்லை என கூச்சலிட்டார்.

‘மூதாட்டியிடம் செயின் பறிப்பு’ : கோவிலில் கைவரிசையை காட்டிய கொள்ளையர்கள்!

அங்கிருந்த பொதுமக்கள் கோவிலுக்கும் தேடியும் எங்கும் கிடைக்காத நிலையில், இது கொள்ளையர்களின் கைவரிசையாக இருக்கலாம் எனக் கூறியுள்ளனர். இதையடுத்து ஜெயலட்சுமி, சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், அப்பகுதியில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது.