“எத்தனை லட்சம் தடுப்பூசி கேட்டாலும் இவ்ளோ தான் அனுப்புவோம்” – எடப்பாடிக்கு ஏமாற்றமளித்த மோடி!

 

“எத்தனை லட்சம் தடுப்பூசி கேட்டாலும் இவ்ளோ தான் அனுப்புவோம்” – எடப்பாடிக்கு ஏமாற்றமளித்த மோடி!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை பரவிவருகிறது. இதனால் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகமாகிறது. அதே சமயம் முன்பை விட தற்போது தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் பெரும்பாலான மாநிலங்களில் தடுப்பூசி பற்றாக்குறை நிலவிவருகிறது.

“எத்தனை லட்சம் தடுப்பூசி கேட்டாலும் இவ்ளோ தான் அனுப்புவோம்” – எடப்பாடிக்கு ஏமாற்றமளித்த மோடி!

குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் தடுப்பூசி இல்லை என்று போர்டு எழுதி மாட்டுகின்றனர். தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்திலும் இதே போன்று ஒரு சம்பவம் நிகழ்ந்தது. இருப்பினும் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை இல்லை என்றே சுகாதாரத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் கூறிவருகிறார். ஆனால் 45 வயது மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருவதால், கூடுதலாக தடுப்பூசி தேவைப்படுவதாக தமிழக அரசு மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியது.

“எத்தனை லட்சம் தடுப்பூசி கேட்டாலும் இவ்ளோ தான் அனுப்புவோம்” – எடப்பாடிக்கு ஏமாற்றமளித்த மோடி!

அதன்படி மாநிலத்திற்குக் கூடுதலாக 15 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசியும், 5 லட்சம் கோவாக்சின் தடுப்பூசியும் கொடுக்க வேண்டும் என்று அக்கடிதத்தில் அரசு கோரிக்கை விடுத்திருந்தது. மொத்தமாக 20 லட்சம் கேட்டதற்கு வெறும் 1 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகளை மட்டுமே மத்திய அரசு அனுப்பியிருக்கிறது. கோவாக்சின் தடுப்பூசிக்கே அதிக டிமாண்ட் இருப்பது கவனத்துக்குரியது.