’கொரோனாவுக்கு புதிய முறை பரிசோதனை’ மத்திய அமைச்சர் அறிவிப்பு

 

’கொரோனாவுக்கு புதிய முறை பரிசோதனை’ மத்திய அமைச்சர் அறிவிப்பு

கொரோனாவின் தாக்கம் அதிகம் உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியாவில் 67,757 பேர் புதிய நோயாளிகள் உறுதி செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 813 பேரும் நேற்று இறந்திருக்கிறார்கள். இந்தியாவில் இதுவரை 1,09,184 பேர் கொரோனாவால் பலியாகியிருக்கிறார்கள்.

இந்தியாவில் கொரோனா பரிசோதனைகள் தீவிரமாக எடுக்கப்படுகின்றன. நிகழ்ச்சி ஒன்றில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் பேசுகையில் ‘வரவிருக்கும் திருவிழாக் காலங்களில், மக்கள் வெளியே செல்லாமல், வீட்டிலேயே கொண்டாடும்படியும், கூட்டத்தை தவிர்த்து, மத்திய அரசின் முன்னெச்சரிக்கை வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும்’ என்று அவர் கேட்டுக் கொண்டார்.

’கொரோனாவுக்கு புதிய முறை பரிசோதனை’ மத்திய அமைச்சர் அறிவிப்பு
Dr. Harsh Vardhan

”கொரோனா பரிசோதனைக்கு பெலுடா என்ற புதிய பரிசோதனை விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. 2000 நோயாளிகளுக்கு இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், முடிவுகள் 98 சதவீதம் துல்லியமாக இருந்தது. அறிவியல் மற்றும் தொழிற் ஆராய்ச்சி கவுன்சில் உருவாக்கிய இந்த பெலுடா பரிசோதனைக்கு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் மற்றும் பெங்களூரில் உள்ள அணுசக்தி துறையின் உயிரியல் தேசிய மையம் ஆகியவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

கொவிட் தடுப்பூசிக்கான முதல் கட்ட பரிசோதனை முடிந்து , 2ம் கட்ட பரிசோதனைகள் நடந்து வருகிறது. 3ம் கட்ட பரிசோதனை தொடரவுள்ளது. 2 மற்றும் 3 முறை போடப்படும் தடுப்பூசிகள் குறித்து தற்போது பரிசோதனை நடந்து வருகிறது” என்றும் டாக்டர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்தார்.

’கொரோனாவுக்கு புதிய முறை பரிசோதனை’ மத்திய அமைச்சர் அறிவிப்பு

கொவிட் -19 ஒழிப்புப் பணிக்கு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு முதல் கட்டமாக ரூ.3000 கோடி வழங்கியதாகவும், 3 மாநிலங்கள் தவிர, பிற மாநிலங்கள் இந்த நிதியை முழுவதுமாக பயன்படுத்திவிட்டன எனவும் டாக்டர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்தார்.

கொவிட் – 19 சிகிச்சையில் ஆயுர்வேத மருத்துவ முறைகளின் தாக்கம் குறித்து அறிவியல் ஆய்வுகள் தொடங்கியுள்ளதாகவும் டாக்டர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்தார்.