தமிழக காவல் அதிகாரிகள் 5 பேருக்கு மத்திய அரசு விருது!
Oct 31, 2020, 14:10 IST1604133636000
தமிழக காவல் அதிகாரிகள் 5 பேருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் சிறப்பு செயல்பாட்டிற்கான விருது அறிவித்துள்ளது. ஐபிஎஸ் அதிகாரிகள் என் கண்ணன், ஜே. மகேஷ் மற்றும் எஸ்.பி எஸ்.அரவிந்த், டி.எஸ்.பி பண்டரிநாதன் ஆகியோருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காவல் ஆய்வாளர் எம். தாமோதரனுக்கும் மத்திய உள்துறை அமைச்சரின் சிறப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் குடியரசு தினத்தையொட்டி, சிறப்பாக செயல்பட்ட 23 காவல் அதிகாரிகள் மத்திய அரசு விருது வழங்கி கவுரவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.