கத்தி முனையில் செல்போன் நகை பறிப்பு – சிசிடிவி காட்சிகளால் பரபரப்பு!

 

கத்தி முனையில் செல்போன் நகை பறிப்பு – சிசிடிவி காட்சிகளால் பரபரப்பு!

சென்னை, போரூரில் இளைஞர் ஒருவரிடம் கத்தி முனையில் செல்போன் நகை பறித்துச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கத்தி முனையில் செல்போன் நகை பறிப்பு – சிசிடிவி காட்சிகளால் பரபரப்பு!

சென்னை போரூர் – குன்றத்தூர் சாலையில், மதனந்தபுரம் அருகே நேற்றிரவு ஒரு கடையின் முன் இளைஞர் ஒருவர் புகைப் பிடித்தபடி நின்று கொண்டு இருந்தார்.

அப்போது, ஒரு பைக்கில் வந்த 2 இளைஞர்கள், கத்தியை காட்டி மிரட்டி சிகரெட் பிடித்த இளைஞனிட நகை, செல்போன், பணம் ஆகியவற்றை பறிக்கிறார்.

கத்தி முனையில் செல்போன் நகை பறிப்பு – சிசிடிவி காட்சிகளால் பரபரப்பு!

அவற்றை பறித்துக் கொண்டு, இளைஞரை கன்னத்தில் அறைந்து விட்டு அவர்கள் அங்கிருந்து தப்பிச் செல்கின்றனர். இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.

கத்தி முனையில் செல்போன் நகை பறிப்பு – சிசிடிவி காட்சிகளால் பரபரப்பு!

மர்ம நபர்கள் செல்போன், பணம் ஆகியவற்றை பறித்துச் சென்ற நிலையில், அது குறித்து சற்றும் பதற்றப்படாத இளைஞர் கீழே போட்ட சிகரெட்டை மீண்டும் எடுத்து புகைத்துக் கொண்டு செல்கிறார்.

கத்தி முனையில் செல்போன் நகை பறிப்பு - சிசிடிவி காட்சிகளால் பரபரப்பு!

அந்த காட்சிகளும் கேமராவில் பதிவாகி உள்ளன. இந்த சம்பவம் குறித்து போரூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.