பைக்கில் சென்றவரை அரிவாளால் சரமாரியாக தாக்கி வழிப்பறி; பதைபதைக்கும் சிசிடிவி காட்சி!

 

பைக்கில் சென்றவரை அரிவாளால் சரமாரியாக தாக்கி வழிப்பறி; பதைபதைக்கும் சிசிடிவி காட்சி!

மதுரை தெப்பக்குளம் அருகே பைக்கில் சென்ற நபரை தாக்கி வழிப்பறி செய்யப்பட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

மதுரை சோலை அழகுபுரம் பகுதியை சேர்ந்த ராஜா என்பவர் நேற்று வழக்கம் போல பணியை முடித்து விட்டு தெப்பக்குளம் வழியாக வீடு திரும்பி கொண்டிருந்துள்ளார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த இளைஞர்கள் இருவர், கையில் வைத்திருந்த அரிவாளால் ராஜாவை தாக்கி பணம் மற்றும் செல்போனை பறிக்க முயன்றுள்ளனர். அச்சமயம்பார்த்து எதிரே வந்த மற்றொரு பைக் மீது அந்த இளைஞர்கள் சென்ற பைக் மோதியதால் விபத்து ஏற்பட்ட நிலையில், ராஜா அவர்களை பிடிக்க முயற்சி செய்துள்ளார்.

பைக்கில் சென்றவரை அரிவாளால் சரமாரியாக தாக்கி வழிப்பறி; பதைபதைக்கும் சிசிடிவி காட்சி!

ஆனால், அரிவாளால் ராஜாவை சரமாரியாக தாக்கிய இளைஞர்கள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த ராஜாவை மீட்டு பொதுமக்கள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக தெப்பக்குளம் காவல்நிலையத்தில் ராஜா அளித்த புகாரின் பேரில், போலீசார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை சோதனை செய்தனர். அந்த கேமராவில் இளைஞர்கள் ராஜாவை அரிவாளால் வெட்டி வழிப்பறி செய்ய முயன்ற காட்சிகள் முழுவதுமாக பதிவாகியிருந்துள்ளது.

அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், கிடைக்கப்பெற்ற காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளை தேடி வருகின்றனர். ஆள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் அந்த பகுதியில் இளைஞர்கள் வழிப்பறி செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.