ஜன்னலை உடைத்து திருட முயன்ற மர்ம நபர்- சிசிடிவியில் பதிவான காட்சிகள்!

 

ஜன்னலை உடைத்து திருட முயன்ற மர்ம நபர்- சிசிடிவியில் பதிவான காட்சிகள்!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில், வீட்டின் ஜன்னலை உடைத்து மர்ம நபர் திருட முயன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது.

ஜன்னலை உடைத்து திருட முயன்ற மர்ம நபர்- சிசிடிவியில் பதிவான காட்சிகள்!

வாணியம்பாடி அண்ணா நகர் பகுதியில் வைதீஸ்வரன் என்பவர் வீட்டில் மர்ம நபர் ஒருவர், ஜன்னலை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். பலமணி நேரமாக வீட்டின் ஜன்னலை உடைப்பதும், அங்கிருந்த சிசிடிவி கேமராவை அடித்து உடைக்கும் காட்சிகளும் சிசிடிவியில் பதிவாகி உள்ளன. நீண்ட நேரம் போராடியும், ஜன்னலை உடைக்க முடியவில்லை என்பதால் மர்ம நபர் அங்கிருந்து திரும்பி சென்றுள்ளார்.

ஜன்னலை உடைத்து திருட முயன்ற மர்ம நபர்- சிசிடிவியில் பதிவான காட்சிகள்!

இதற்கிடையே, திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி செட்டியப்பணுர் நெடுஞ்சாலை சந்திப்பு தொடங்கி சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி வரையில் மாலை மற்றும் இரவு நேரங்களில் வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

ஜன்னலை உடைத்து திருட முயன்ற மர்ம நபர்- சிசிடிவியில் பதிவான காட்சிகள்!
அவ்வழியாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை மடக்கி, செல்போன் மற்றும் பொருட்களை வழிப்பறி செய்வது வாடிக்கையாகி வருகிறது. காவல் துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
-பழனி