‘பெண்ணின் கழுத்தில் இருந்து செயினை அறுத்த இளைஞர்கள்’ : பதைபதைக்கும் சிசிடிவி காட்சி!

 

‘பெண்ணின் கழுத்தில் இருந்து செயினை அறுத்த இளைஞர்கள்’ : பதைபதைக்கும் சிசிடிவி காட்சி!

காரமடை அருகே நடந்து சென்று கொண்டிருக்கும் பெண் ஒருவரிடம் இருந்து செயின் பறிக்கப்பட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் வசித்து வரும் விஜயலட்சுமி (58), மேட்டுபாளையம் அருகே காரமடையில் இருக்கும் தனது சம்பந்தி வீட்டிற்கு செல்வதற்காக காந்திநகர் பேருந்து நிலையத்தில் இருந்து நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அவர் கழுத்தில் தங்க சங்கிலி அணிந்திருப்பதை பார்த்த இளைஞர்கள், அங்கிருந்தே விஜயலட்சுமியை பின்தொடர்ந்து வந்துள்ளனர்.

‘பெண்ணின் கழுத்தில் இருந்து செயினை அறுத்த இளைஞர்கள்’ : பதைபதைக்கும் சிசிடிவி காட்சி!

ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு சாலையில் விஜயலட்சுமி செல்லும் போது, எதிரே சென்ற அந்த இளைஞர்கள் அவரது கழுத்தில் இருந்த சங்கிலியை அறுக்க முயன்றுள்ளனர். சுதாரித்துக் கொண்ட விஜயலட்சுமி, செயினை இறுக்கமாக பிடித்துள்ளார். இதில், செயின் இரண்டாக அறுந்து 4 சவரன் இளைஞர்களிடமும் 1 சவரன் விஜயலட்சுமி யிடமும் சிக்கியுள்ளது. உடனே அங்கிருந்து, அதிவேகமாக இளைஞர்கள் பைக்கில் எஸ்கேப் ஆகியுள்ளனர்.

அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா ஒன்றில் இந்த காட்சிகள் அனைத்தும் பதிவாகியுள்ளது. கிடைக்கப்பெற்ற காட்சிகளின் அடிப்படையில் போலீசார், செயின் பறிப்பில் ஈடுபட்ட இளைஞர்களை தேடி வருகின்றனர்.