எந்த மாநிலத்திற்கு சென்றிருந்தாலும் அங்கேயே தேர்வெழுதலாம் – சிபிஎஸ்இ

 

எந்த மாநிலத்திற்கு சென்றிருந்தாலும் அங்கேயே தேர்வெழுதலாம் – சிபிஎஸ்இ

கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் பள்ளி, கல்லூரி தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன. அதே போல சி.பி.எஸ்.சி 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளும் பாதியிலேயே ஒத்தி வைக்கப்பட்டன. சில நாட்களுக்கு முன்னர் மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் ஜூலை 1 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை 10 மற்றும் 12 ஆம் வகுப்புக்கான தேர்வுகள் நடைபெறும் என்று அறிவித்திருந்த நிலையில், தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்படவில்லை. கடந்த 18 ஆம் தேதி, சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வுக்கான அட்டவணையை சி.பி.எஸ்.இ. தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சன்யம் பரத்வாஜ் வெளியிட்டார். அந்தந்த பள்ளிகளிலேயே 10 மற்றும் 12ஆம் வகுப்பு சி.பி.எஸ்.இ. தேர்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மாணவர்கள் தேர்வுக்கு ஆயத்தமாகி வருகின்றனர்.

எந்த மாநிலத்திற்கு சென்றிருந்தாலும் அங்கேயே தேர்வெழுதலாம் – சிபிஎஸ்இ

இந்நிலையில் ஊரடங்கு காரணமாக மாநிலம் விட்டு மாநிலம் மாறியிருந்தாலும் அங்கிருந்தபடியே தேர்வு எழுதலாம் என மத்திய மத்திய மனித வள அமைச்சகம் அறிவித்துள்ளது. 10 மற்றும்12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்கள் தற்போது இருக்கும் மாவட்டங்களிலேயே தேர்வு எழுதலாம் என்றும், வெளியூர் சென்றிருந்தால் அங்கிருந்தபடியே தேர்வு எழுதலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.