சிபிஎஸ்இ தேர்வு: கொரோனாவுக்கு பின் தேர்வு? குழம்பும் மாணவர்கள்

 

சிபிஎஸ்இ தேர்வு: கொரோனாவுக்கு பின் தேர்வு? குழம்பும் மாணவர்கள்

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்னும் நடத்தப்படாமல் இருக்கும் நிலையில் சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தற்போது ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மாணவர்களின் உடல்நலத்தை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக பிரதமர் மோடி அறிவித்தார்.

சிபிஎஸ்இ தேர்வு: கொரோனாவுக்கு பின் தேர்வு? குழம்பும் மாணவர்கள்

இந்நிலையில் 12 ஆம் வகுப்பு மாணவர்களை எந்த அடிப்படையில் தேர்ச்சி பெற வைப்பது குறித்து ஆராய்ந்து வருவதாகவும், இரண்டு வாரங்களுக்குள் அது குறித்த முடிவு எட்டப்படும் எனவும் சிபிஎஸ்இ கல்வி வாரியம் தெரிவித்துள்ளது. இதற்கான வழிமுறைகளை கல்வி நிபுணர்கள் ஆராய்ந்து ஒரு முடிவை எடுப்பார்கள் என சிபிஎஸ்இ செயலாளர் அனுராக் திரிபாதி டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இப்படி உருவாக்கப்படும் தேர்வு முறைகள் குறித்து மாணவர்கள் யாருக்காவது திருப்தி இல்லை என்றால், கொரோனாவுக்குப் பிறகு அவர்கள் மறு தேர்வு எழுத வாய்ப்பளிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.