சி.பி.எஸ்.இ தேர்வுகள் அந்தந்த பள்ளிகளிலேயே நடைபெறும்- அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தகவல்

 

சி.பி.எஸ்.இ தேர்வுகள் அந்தந்த பள்ளிகளிலேயே நடைபெறும்- அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தகவல்

கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் பள்ளி, கல்லூரி தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன. அதே போல சி.பி.எஸ்.சி 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளும் பாதியிலேயே ஒத்தி வைக்கப்பட்டன. சில நாட்களுக்கு முன்னர் மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் ஜூலை 1 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை 10 மற்றும் 12 ஆம் வகுப்புக்கான தேர்வுகள் நடைபெறும் என்று அறிவித்திருந்த நிலையில், தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்படவில்லை.

சி.பி.எஸ்.இ தேர்வுகள் அந்தந்த பள்ளிகளிலேயே நடைபெறும்- அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தகவல்

அதனைத்தொடர்ந்து, கடந்த 16 ஆம் தேதி தேர்வு அட்டவணை வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் சில தொழில்நுட்ப பிரச்னை காரணமாக அன்று தேர்வு அட்டவணை வெளியாகவில்லை. அதனைத்தொடர்ந்து கடந்த 18 ஆம் தேதி, சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வுக்கான அட்டவணையை சி.பி.எஸ்.இ. தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சன்யம் பரத்வாஜ் வெளியிட்டார். அதன் படி மாணவர்கள் தேர்வுக்கு ஆயத்தமாகி வருகின்றனர்,

இந்நிலையில், அந்தந்த பள்ளிகளிலேயே 10 மற்றும் 12ஆம் வகுப்பு சி.பி.எஸ்.இ. தேர்வு நடைபெறும் என்றும் ஜூலை மாத இறுதியில் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படலாம் என்றும் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.