சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து

 

சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து

இந்தியாவில் முதல் அலையை விட கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பெரும் பாதிப்பை எற்படுத்திவருகிறது. இதனால், கடந்த மார்ச் மாதம் நடத்தப்பட வேண்டிய சிபிஎஸ்இ பொதுத்தேர்வு இன்னும் நடத்தப்படாமல் உள்ளன. 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்தலாமா வேண்டாமா என மத்திய அரசு ஆலோசித்துவந்தது. கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தவுடன் ஜூலை மாதம் தேர்வுகளை நடத்த கல்வியாளர்கள் ஆலோசனை வழங்கினர்.

சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து

இந்நிலையில் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.கொரோனா சூழலில் மாணவர்கள் நலன் கருதி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும், மாணவர்களின் உடல்நிலை மற்றும் பாதுகாப்பில் சமரசம் செய்துகொள்ள முடியாது எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.