விஜய் மல்லையா வழக்கை விசாரித்த அதே சி.பி.ஐ. குழு நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தை விசாரிக்கிறது

 

விஜய் மல்லையா வழக்கை விசாரித்த அதே சி.பி.ஐ. குழு  நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தை விசாரிக்கிறது

பீகார் அரசின் பரிந்துரையை ஏற்று, பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்தை சி.பி.ஐ. விசாரிக்கும் என நேற்று முன்தினம் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது. இதனையடுத்து சி.பி.ஐ. இந்த வழக்கை விசாரிக்க தொடங்கியுள்ளது. அகஸ்டாவெஸ்ட்லேண்ட் ஊழல் மற்றும் விஜய் மல்லையாவுக்கு எதிரான வங்கி மோசடி வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ. சிறப்பு விசாரணை குழு அதிகாரிகள் குழுதான் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்தையும் விசாரிக்க உள்ளது.

விஜய் மல்லையா வழக்கை விசாரித்த அதே சி.பி.ஐ. குழு  நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தை விசாரிக்கிறது

தற்போது சி.பி.ஐ. அதிகாரிகள் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பாக எப்.ஐ.ஆர். பதிவு செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தந்தை கொடுத்த புகாரின் பேரில், தற்கொலைக்கு தூண்டியதாக சுஷாந்த்தின் லைவ் இன் பார்ட்னர் ரியா சக்கரவர்த்தி எதிராக முதலில் எப்.ஐ.ஆர். பதிவு செய்த பீகார் போலீசாருடன் சி.பி.ஐ. அதிகாரிகள் தொடர்பில் உள்ளனர். சி.பி.ஐ. அதிகாரிகள் இது குறித்து கூறுகையில், நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பாக விரைவில் சி.பி.ஐ.யின் வலைதளத்தில் விரைவில் பதிவேற்றம் செய்யப்படும் என தெரிவித்தனர்.

விஜய் மல்லையா வழக்கை விசாரித்த அதே சி.பி.ஐ. குழு  நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தை விசாரிக்கிறது

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இது இந்திய திரைப்பட உலகில் பெரிய அதிர்வை ஏற்படுத்தியது. சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலைக்கான காரணம் குறித்து மகாராஷ்டிரா போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் மறைந்த சுஷாந்த் சிங் ராஜ்புத் தந்தை பாட்னா காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில், நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் குறித்து பீகார் அரசு சி.பி.ஐ. விசாரிக்க பரிந்துரை செய்து மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியது.