சுஷாந்த் ராஜ்புத் தற்கொலை வழக்கை சி.பி.ஐ விசாரிக்கும்! – உச்ச நீதிமன்றம் அதிரடி

 

சுஷாந்த் ராஜ்புத் தற்கொலை வழக்கை சி.பி.ஐ விசாரிக்கும்! – உச்ச நீதிமன்றம் அதிரடி

தற்கொலை செய்துகொண்ட பாலிவுட் நடிகர் வழக்கை சி.பி.ஐ விசாரிக்கும் என்று உச்ச நீதிமன்றம் அதிரடியாக அறிவித்துள்ளது.

சுஷாந்த் ராஜ்புத் தற்கொலை வழக்கை சி.பி.ஐ விசாரிக்கும்! – உச்ச நீதிமன்றம் அதிரடி
பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் தன்னுடைய வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக அரசியல் கட்சிப் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். குற்றவாளிகளைத் தப்பிக்க வைக்க மகாராஷ்டிராவை ஆளும் சிவசேனா முயற்சிக்கிறது என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. எனவே, இந்த வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்று பா.ஜ.க-வின் சுப்ரமணிய சுவாமி தொடங்கி சுஷாந்த் பெற்றோர் வரை பலரும் வலியுறுத்தி வந்தனர்..

சுஷாந்த் ராஜ்புத் தற்கொலை வழக்கை சி.பி.ஐ விசாரிக்கும்! – உச்ச நீதிமன்றம் அதிரடி
சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் காதலி ரியா சக்ரவர்த்தி இந்த வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இன்று தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், இந்த வழக்கை சி.பி.ஐ விசாரிக்க உத்தரவிட்டது. மேலும், வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சி.பி.ஐ-க்கு வழங்க மும்பை காவல் துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.