மிருகத்தனமாக போலீசார் தாக்கியதாலேயே ஜெயராஜ், பென்னிக்ஸ் உயிரிழந்தனர்- சிபிஐ அறிக்கை

 

மிருகத்தனமாக போலீசார் தாக்கியதாலேயே ஜெயராஜ், பென்னிக்ஸ் உயிரிழந்தனர்- சிபிஐ அறிக்கை

தூத்துகுடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஊரடங்கு நேரத்தில் கடையை திறந்து வைத்ததாக கைது செய்யப்பட்ட தந்தை மகன், ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் காவலர்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கு பூதாகரமாக உருவெடுத்ததைத் தொடர்ந்து, கொலையில் சம்பந்தப்பட்ட 10 காவலர்கள் கைது செய்யப்பட்டனர். அதன் பிறகு இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாறியது. இந்த வழக்கில் கைதான காவலர்கள் தாமஸ், முத்துராஜ் மற்றும் ஸ்ரீதர் உள்ளிட்டோர் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். ஆனால் சிறையில் இருக்கும் காவலர்களுக்கு ஜாமீன் வழங்க சிபிஐ அனுமதி அளிக்கவில்லை.

மிருகத்தனமாக போலீசார் தாக்கியதாலேயே ஜெயராஜ், பென்னிக்ஸ் உயிரிழந்தனர்- சிபிஐ அறிக்கை

இந்நிலையில் சாத்தான்குளம் சம்பவம் குறித்து சிபிஐ வெளியிட்டுள்ள நிலை அறிக்கையில், “மிருகத்தனமாக போலீசார் தாக்கியதாலேயே ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் உயிரிழந்தனர், காவல்நிலையம், லத்தி மற்றும் அவர்களின் உடைகளில் படிந்திருந்த ரத்த மாதிரிகளை சேகரித்து டிஎன்ஏ பரிசோதனை ஆகியவற்றின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. காவல்நிலையத்தில் வைத்து ஜெயராஜ் பென்னிக்ஸ் ரத்த சொட்ட சொட்ட தாக்கப்பட்டுள்ளனர்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.