சிபிஐ தலைவர் நல்லகண்ணுவுக்கு கொரோனா தொற்று உறுதி!

 

சிபிஐ தலைவர் நல்லகண்ணுவுக்கு கொரோனா தொற்று உறுதி!

இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் வேகமெடுக்கிறது. நாடு முழுவதும் தடுப்பூசி போடப்பட்டும் பாதிப்பு எண்ணிக்கை குறைந்தபாடில்லை. தற்போது இரட்டை உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா வைரஸ் பரவிவருவதால் அதன் தாக்கம் அதிவேகமாக இருக்கிறது. இந்த வகை வைரஸ் முந்தையை வைரஸை விட வீரியமிக்கது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

சிபிஐ தலைவர் நல்லகண்ணுவுக்கு கொரோனா தொற்று உறுதி!

இதனால் அனைவரும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்குமாறு மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்திவருகின்றன. தற்போது பிரபலங்களுக்கும் கொரோனா தொற்று பரவிவருகிறது. தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. அரசியல் பிரபலங்களுக்கும் வேட்பாளர்களுக்கும் அடுத்தடுத்து கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு வருகிறது.

சிபிஐ தலைவர் நல்லகண்ணுவுக்கு கொரோனா தொற்று உறுதி!

தற்போது இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் நுரையீரலில் சிறிது பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.