சிபிஐ கஸ்டடியில் 5 காவலர்கள்!- விஸ்வரூபம் எடுக்கும் சாத்தான்குளம் விவகாரம்

 

சிபிஐ கஸ்டடியில் 5 காவலர்கள்!- விஸ்வரூபம் எடுக்கும் சாத்தான்குளம் விவகாரம்

சாத்தான்குளத்தில் தந்தை, மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 5 காவலர்களை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு மதுரை நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

சிபிஐ கஸ்டடியில் 5 காவலர்கள்!- விஸ்வரூபம் எடுக்கும் சாத்தான்குளம் விவகாரம்

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் செல்போன் கடை வைத்திருந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னீக்ஸ் ஆகியோரை விசாரணைக்கு அழைத்துச் சென்ற காவல்துறையினர், அவர்களை அடித்துக் கொன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த மரணம் குறித்த சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் விசாரித்து வந்தனர். இந்த நிலையில் தமிழக அரசின் உத்தரவின்படி வழக்கை கடந்த 10-ம் தேதி சி.பி.ஐ. தன் வசப்படுத்திக் கொண்டது.

சிபிஐ கஸ்டடியில் 5 காவலர்கள்!- விஸ்வரூபம் எடுக்கும் சாத்தான்குளம் விவகாரம்

இந்த கொலை வழக்கு தொடர்பாக சாத்தான்குளம், கோவில்பட்டியில் ஆகிய இடங்களில் சிபிஐ விசாரணை நடத்தியது. இந்த வழக்கில் கைதானவர்களை 15 நாட்களுக்குள் காவலில் எடுத்து விசாரிக்கும்படி உயர்நீதிமன்ற மதுரை கிளை கூறியிருந்தது. இந்தநிலையில் விசாரணையின் ஒரு பகுதியை முடித்த சி.பி.ஐ, 4 காவலர்களுடன் நேற்று மாலை மதுரைக்கு வந்தனர். இதையடுத்து, மதுரை மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்துக்கு சென்ற சிபிஐ, இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், ஏட்டு முருகன், காவலர் முத்துராஜ் ஆகியோரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு மனுத் தாக்கல் செய்தது.

சிபிஐ கஸ்டடியில் 5 காவலர்கள்!- விஸ்வரூபம் எடுக்கும் சாத்தான்குளம் விவகாரம்

இந்த மனுவை தலைமை குற்றவியல் நீதிபதி ஹேமந்தகுமார், விசாரணைக்கு ஏற்றுக்கொண்டார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்ட 5 காவலர்கள் மதுரை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். இதையடுத்து, சிபிஐ தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி ஹேமந்தகுமார், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்ட 5 காவலர்களை 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தது.