சிவசங்கர் பாபா பள்ளி ஆசிரியைகளுக்கு கிடுக்குபிடி… சிபிசிஐடி போலீசார் வாக்குமூலம் பதிவு!

 

சிவசங்கர் பாபா பள்ளி ஆசிரியைகளுக்கு கிடுக்குபிடி… சிபிசிஐடி போலீசார் வாக்குமூலம் பதிவு!

சிவசங்கர் பாபா பள்ளி ஆசிரியைகளிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்திய நிலையில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிவசங்கர் பாபா பள்ளி ஆசிரியைகளுக்கு கிடுக்குபிடி… சிபிசிஐடி போலீசார் வாக்குமூலம் பதிவு!

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிவசங்கர் பாபா. முன்னாள் மாணவிகள் 18 பேர் பாலியல் புகார் கொடுத்த நிலையில் சிவசங்கர் பாபா மீது 3 போக்ஸோ பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த சூழலில் சிவசங்கர் பாபா பள்ளி ஆசிரியைகள் ஊழியர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க சிபிசிஐடி முடிவு செய்த நிலையில் ஆசிரியைகளை 5 பேர் தலைமறைவாகினர். இதனால் சம்மன் அவர்களின் வீடு வாசலில் இருந்த சுவரில் ஒட்டப்பட்ட நிலையில் அவர்கள் ஆஜராகாத நிலையில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த சூழலில் ஆசிரியைகள் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகினர்

சிவசங்கர் பாபா பள்ளி ஆசிரியைகளுக்கு கிடுக்குபிடி… சிபிசிஐடி போலீசார் வாக்குமூலம் பதிவு!

இந்நிலையில் சிவசங்கர் பாபாவின் சுஷில் ஹரி பள்ளியை சேர்ந்த மூன்று ஆசிரியைகளிடம் சிபிசிஐடி போலீசார் வாக்குமூலம் பதிவு செய்து வருகின்றனர். ஐந்து ஆசிரியைகளுக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் மூன்று ஆசிரியைகள் நேற்று சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகினர். மாணவிகளுக்கு சிவசங்கர் பாபா பாலியல் தொல்லை தந்தது பற்றி மூன்று ஆசிரியைகளிடமும் விசாரணை நடந்தது. எப்போது அழைத்தாலும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் எனவும் சிபிசிஐடி போலீசார் அறிவுறுத்தி உள்ளது. 5 ஆசிரியைகளில் 3 பேர் ஆஜராகி வாக்குமூலம் தந்த நிலையில் 2 ஆசிரியைகள் தொடர்ந்து தலைமறைவாகவே உள்ளனர்.