தழுதழுத்த குரலில் கெஞ்சிய சிவசங்கர் பாபா: 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி திட்டம்!

 

தழுதழுத்த குரலில் கெஞ்சிய சிவசங்கர் பாபா: 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி திட்டம்!

பாலியல் வழக்கில் கைதாகியுள்ள சிவசங்கர் பாபாவை காவலில் எடுத்து விசாரிப்பதற்காக சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

தழுதழுத்த குரலில் கெஞ்சிய சிவசங்கர் பாபா: 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி திட்டம்!

சென்னை கேளம்பாக்கத்தில் இயங்கிவரும் சிவசங்கர் பாபா வின் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இது குறித்து முன்னாள் மாணவிகள் புகார் அளித்த நிலையில் சிவசங்கர் பாபா மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.இந்த வழக்கு சிபிசிஐடிக்கு கடந்த ஜூன் 14-ம் தேதி மாற்றப்பட்டது.

தழுதழுத்த குரலில் கெஞ்சிய சிவசங்கர் பாபா: 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி திட்டம்!

அத்துடன் இது குறித்து விசாரிக்க அவருக்கு சம்மன் அளிக்கப்பட்ட நிலையில் அவர் டேராடூனில் உள்ள தனியார் மருத்துவமனையில் நெஞ்சுவலி காரணமாக சிகிச்சை பெற்று வருவதாக அவரது வழக்கறிஞர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடத்த டேராடூன் விரைந்த சிபிசிஐடி போலீசார் அங்கிருந்து சிவசங்கர் பாபா தப்பித்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து அவரை டெல்லியில் வைத்து சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.டெல்லியில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா அங்கு உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின் நீதிமன்ற அனுமதியுடன் தமிழகம் அழைத்து வரப்பட்டார்.இதையடுத்து செங்கல்பட்டு போக்ஸோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சிவசங்கர் பாபா செங்கல்பட்டு சிறையில் நேற்றிரவு அடைக்கப்பட்டார்.

தழுதழுத்த குரலில் கெஞ்சிய சிவசங்கர் பாபா: 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி திட்டம்!

இந்நிலையில் பாலியல் வழக்கில் கைதாகியுள்ள சிவசங்கர் பாபாவை காவலில் எடுத்து விசாரிப்பதற்காக சி.பி.சி.ஐ.டி. போலீசார் இன்று செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்கின்றனர். முன்னதாக தழுதழுத்த குரலில் செங்கல்பட்டு மகிளா கோர்ட் மாஜிஸ்திரேட்டிடம் , என்னை சிறைக்கு அனுப்பாதீங்க.என்னை மருத்துவமனையில் சேருங்க என்று சிவசங்கர் பாபா கெஞ்சியது குறிப்பிடத்தக்கது.