சாத்தான்குளம் ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸிடம் சிபிசிஐடி இன்று விசாரணை !

 

சாத்தான்குளம் ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸிடம் சிபிசிஐடி இன்று விசாரணை !

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் உயிரிழந்த விவகாரத்தில் சிபிசிஐடி, விசாரணையைக் கையிலெடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் கைது செய்யப்பட்ட நிலையில் எஸ்.ஐ.பாலகிருஷ்ணன், தலைமை காவலர் முருகன், சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஆகியோர் மீது கொலை வழக்கு பதியப்பட்டது. இதனையடுத்து இந்த இரட்டை கொலை வழக்கு வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர்களைத் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துமாறு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விரிவான தீர்ப்பு பின்னர் வழங்கப்படும் என்று கூறி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

சாத்தான்குளம் ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸிடம் சிபிசிஐடி இன்று விசாரணை !

இதை தொடர்ந்து சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 3 பேருக்கு ஜூலை 16 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் தலைமை காவலர் முத்து ராஜுக்கு வரும் 17 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சம்பந்தப்பட்ட சிறையில் அவர்களுக்கு பாதுகாப்பு பிரச்சனை எழும் என்பதால் சிறைத்துறை நிர்வாகம் அவர்களை மதுரை மத்திய சிறைச்சாலைக்கு மாற்ற திட்டமிட்டுள்ளது.

சாத்தான்குளம் ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸிடம் சிபிசிஐடி இன்று விசாரணை !

இந்நிலையில் தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தான்குளம் ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸிடம் சிபிசிஐடி இன்று விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டவர்களை காவலில் எடுப்பது தொடர்பாக இன்று முடிவெடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சாத்தான்குளம் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் குழுவினருக்கும் தொடர்பு இருக்கும் என புகார் எழுந்த நிலையில் தமிழகத்தில் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் குழுவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.