தலையை வெட்டினார் -ஊரை சுற்றினார் -ஊர் மக்களை உறைய வைத்த சம்பவம்

 

தலையை வெட்டினார் -ஊரை சுற்றினார் -ஊர் மக்களை உறைய வைத்த சம்பவம்

தனது மகள் தனக்கு பிடிக்காத ஒருவரை காதலித்ததால் ,கோபம் கொண்ட தந்தை அந்த மகளின் தலையை வெட்டி ஊர் மக்கள் முன்பு ஊர்வலமாக போன காட்சி ஊர் மக்களை உறைய வைத்துள்ளது .

தலையை வெட்டினார் -ஊரை சுற்றினார் -ஊர் மக்களை உறைய வைத்த சம்பவம்

உத்தரபிரதேச மாநிலத்தின் ஹார்டோய் மாவட்டத்தில் உள்ள மஜிலா காவல் நிலைய பகுதியில் பாண்டேதாரா கிராமத்தில் வசிப்பவர் சர்வேஷ்குமார்.இவருக்கு 17 வயதான கல்லூரியில் படிக்கும் ஒரு டீனேஜ் மகளிருக்கிறார் .அந்த டீனேஜ் பெண் அந்த ஊரை சேர்ந்த ஒரு  வாலிபரை காதலித்து வந்துள்ளார் .இந்த மகளின் காதல் விவகாரம் அந்த பெண்ணின் தந்தைக்கும், தாய்க்கும் பிடிக்கவில்லை .இதனால் அவரின் மகளிடம் அவர்கள்  அந்த வாலிபருடனான காதலை மறந்து விட்டு ஒழுங்காக படிக்குமாறு கூறியுள்ளார்கள் .ஆனால் அந்த பெண் அதை கேட்காமல் அந்த வாலிபருடனான காதலை தொடர்ந்தார்

இந்நிலையில் கடந்த புதன்கிழமை பிற்பகல் 3 மணியளவில், அந்த பெண்ணின் தந்தை  தனது 17 வயது மகளை அந்த காதலனுடன் கொஞ்சிக்கொண்டிருப்பதை கண்டார் இதனால் கோபமடைந்த அந்த தந்தை, ஒரு அருவாள் கொண்டு அவரின் மகளின் தலையை வெட்டி  துண்டாக்கினார் .பின்னர் அந்த துண்டான தலையுடன் அந்த ஊரிலிருக்கும் பொது மக்கள் முன்னிலையில் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு ஊர்வலமாக சென்றார் .அந்த காட்சியை பார்த்து ஊர் மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள் .

பின்னர் அவர் மகளின் துண்டித்த தலையுடன் அந்த ஊரிலிருக்கும் காவல் நிலையத்தில் சரணடைந்தார் .அப்போது அந்த காவல் நிலையத்திலிருந்த ஒரு கான்ஸ்டபில் அந்த தலையை வாங்கிக்கொண்டு காவல் நிலையத்தை சுற்றி வந்தார் .இந்த காட்சி சமூக ஊடகத்தில் வைரலானதால் அந்த கான்ஸ்டபிள் இடை நீக்கம் செய்யப்பட்டார் .போலீசார் இந்த கொலை பற்றி வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர் .

தலையை வெட்டினார் -ஊரை சுற்றினார் -ஊர் மக்களை உறைய வைத்த சம்பவம்