மாட்டு சந்தையில் மாடுகள் வரத்து குறைந்தது- வெளிமாநில வியாபாரிகள் ஏமாற்றம்!

 

மாட்டு சந்தையில் மாடுகள் வரத்து குறைந்தது- வெளிமாநில வியாபாரிகள் ஏமாற்றம்!

ஈரோடு கருங்கல்பாளையம் காவேரி செக் போஸ்ட் மாட்டுச் சந்தைக்கு மாடுகள் வரத்து குறைந்ததால், வெளிமாநில வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

வார சந்தையான அங்கு, புதன்கிழமைகளில் வளர்ப்பு மாடுகளும், வியாழக்கிழமைகளில் கறவை மாடுகளும் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.

மாட்டு சந்தையில் மாடுகள் வரத்து குறைந்தது- வெளிமாநில வியாபாரிகள் ஏமாற்றம்!

இந்த சந்தைக்கு வாரந்தோறும் 700 முதல் 900 மாடுகள் கொண்டு வரப்படும். மாடுகளை வாங்க தமிழகம் மட்டும் அல்லாமல் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா போன்ற வெளிமாநில வியாபாரிகளும் வந்து வாங்கி செல்வர். கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் மாட்டு சந்தைக்கு தடை விதிக்கப்பட்டதால், கடந்த 6 மாதங்களாக சந்தை கூட வில்லை. இந்த நிலையில், கடந்த வாரம் நிபந்தனைகளுடன் சந்தை கூட அனுமதி அளிக்கப்பட்டது.

சந்தை செயல்படுவது குறித்து விவசாயிகளுக்கும், மாடு விற்பனையாளர்களுக்கும் தெரிவிக்கப்படவில்லை என்பதால், கடந்தவாரம் மாடுகள் வரத்தாகவில்லை. இந்த வாரம் கூடிய சந்தையில் நேற்று முதல் இன்று காலை வரை பசு மாடு, எருமை மாடு, கன்று என அனைத்தும் சேர்த்தே 130 மாடுகளே வரத்தானது. மாடுகளை வாங்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலத்தில் இருந்து வியாபாரிகள் அதிகளவில் வந்திருந்தனர். ஆனால், மாடுகள் போதியளவில் வரத்து இல்லாததால் வெளிமாநில வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

மாட்டு சந்தையில் மாடுகள் வரத்து குறைந்தது- வெளிமாநில வியாபாரிகள் ஏமாற்றம்!

முன்னதாக மாஸ்க் அணிந்து வரும் வியாபாரிகள் மட்டுமே சந்தை பகுதிக்குள் அனுமதிக்கப்பட்டனர். நுழைவு பகுதியில் வியாபாரிகளின் உடல் வெப்ப நிலையை தெரிந்துகொள்ளும் வகைகள் தெர்மல் ஸ்கேன்கருவி மூலம் பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களின் கைகளில் சனிடைசர் மூலம் சுத்தப்படுத்தப்பட்டது. மேலும் வியாபாரிகளின் பெயர், ஊர் ,செல் நம்பர் முகவரி போன்றவையும் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டது.

இந்த மாட்டு சந்தை உதவி மேலாளர் ராஜேந்திரன் கூறுகையில், மாடு விற்பனை செய்யும் விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் தகவல் போய் சேராததால் இந்த வாரம் குறைந்த அளவிலேயே மாடுகள் கொண்டு வரப்பட்டன. கொண்டுவரப்பட்ட மாடுகளில் 95சதவீதம் விற்பனையானது என்று தெரிவித்தார்.